தென் கைலாயம் வெள்ளியங்கிரி மலையின் ஸ்தல வரலாறு

ஏழு மலைகளை கடந்தாலே நம் இறைவனை தரிசிக்க இயலும். வெள்ளியங்கிரியின் நாம் பயணிக்க இருக்கும் இந்த ஏழு மலைகளின் தத்துவம் என்னவென்றால், கீழே உள்ள முதல் மலை நம் உடலின் மூலாதார சக்ரமாகவும், இரண்டாவது மலை ச்வாதிஷ்ட்டானம், மூன்றாவது மலை மணிப்பூரகம், நான்காவது அனாகதம், ஐந்தாவது விஷுக்த்தி, ஆறாவது ஆக்ஞா மற்றும் ஏழாவது மலை சஹாஸ்ரானத்தையும் பறைசாற்றும்.இவ்வாராக இந்த தத்துவம் நமது மோட்ச வாழ்விற்க்கு வழி காட்டும் தியானமுறையையும் நமக்கு நினைவூட்டும் விதமாக அமையப்பெற்றது..

சிவபெருமான்
சிவபெருமான் ஹர ஹர மஹா தேவா ஓம் நமசிவாய... சிவபெருமான்திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய

சிவன் (Śiva) இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர்.இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினாரெனவும், பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசராசரங்களை உருவாக்கினார்களென்றும், தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது. பின்னர் அன்னை பராசக்தி படைப்பிற்காக பிரம்மதேவரையும், அதன்பிறகு காப்பதற்காக காக்கும் கடவுளான விஷ்ணுவையும் உருவாக்கினார் என்றும் கருதப்படுகிறது. கடவுள்களில் ஊழிகாலத்தில் இவர் மட்டுமே நிலைத்திருப்பவராதலால் சதாசிவன் எனப்படுகிறார்.சிவனின் இடப்புறத்திலிருந்து விஷ்ணுவும், வலப்புறத்திலிருந்து பிரம்மரும் உருவானார்கள் என்று திருமாலின் அவதாரங்களில் ஒருவரான வேதவியாசர் கூறுகின்றார். பிரம்மன் தன்னால் படைக்கப்பெற்ற உயிர்களை அழிக்க ஈசனிடம் வேண்டிநிற்க பிரம்மரின் மகனாக மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளான ருத்திரன் உதித்தார் என்று வாயு புராணம் கூறுகின்றது...

linkedin

our nurses